Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோமாளி பட நடிகைக்கு கொரோனா உறுதி… வீட்டில் தனிமையில் ஓய்வு !
சென்னை : கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிகுறி தென்பட்டதால் மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தனுஷ் பட இயக்குநர் கார்த்திக் நரேன்
மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கு
நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டி வருகிறது. மத்திய, மாநில அரசாங்கங்கள் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கை விதித்து கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி உள்ளன.
34,875 பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6,297 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 365 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா உறுதி
இந்த கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' ஜிவி பிரகாஷ் நடித்த 'வாட்ச்மேன்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில்
ஹலோ கைஸ், நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருக்கிறேன். என் பெற்றோரும் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பியதற்காக இந்த உலகத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார். அவரின் பெற்றோர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதவி கேட்டு இருந்தார்.