மாணவியைக் கடத்த முயன்ற வழக்கு: முன்ஜாமீன் கேட்டு சனா கான் மனு!

By Shankar

Sana Khan seeks anticipatory bail
மும்பை: மாணவியைக் கடத்த முயன்ற வழக்கில் தேடப்படும் நடிகை சனா கான், முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்.

பிரபல நடிகை சனா கான் தன் உறவுக்கார இளைஞர் காதலித்த 15 வயதுப் பெண்ணைக் கடத்த தூண்டுதலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனா கானின் உறவினரான நாவெட், சான்பாடாவைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதனால், அவருடனான தொடர்பை மாணவி துண்டித்தார்.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாலை, டியூஷன் முடித்து வீட்டுக்கு மாணவி திரும்பி கொண்டிருந்தபோது, சனா கானின் உறவுக்கார இளைஞனும் அவன் நண்பர்களும் மாணவியை காரில் கடத்த முயன்றனர்.

மாணவி அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தபோது, அங்கு சனா கான் மாணவியின் தாயாருடன் கோபமாக வாக்குவாதம் செய்து தொண்டிருந்தாராம்.

இது பற்றி போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், நாவெட், அவருடைய நண்பர்களை கைது செய்தனர். சனா கானை தேடி வந்தனர்.

ஆனால் சனா கானுக்கு சல்மான்கான் உள்ளிட்ட பெரும் புள்ளகள் ஆதரவளித்தனர். சல்மானின் மென்டல் படத்தில் சனாதான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு மும்பை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் சனா கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X