Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல!
சென்னை: சுரேஷை வாடா போடா என திட்டியதற்காக கமலிடம் நடிகை சனம் ஷெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த நாடா காடா டாஸ்க்கில் சுரேஷ் சக்கரவர்த்தியின் செங்கோல் தனது நெற்றியில் பட்டதற்காக சனம் ஷெட்டி ஆவேசமானார்.
ஒரு இன்ச் கீழே பட்டிருந்தால் என் கண்ணே போயிருக்கும் அவன் கொடுப்பானா என்று கேட்டு விளாசி விட்டார்.
ஏய்.. நீ வெளியே வாடா.. சுரேஷ் சக்ரவர்த்தியை படுகேவலமாக திட்டிய சனம்.. அனல் பறக்கும் புரமோ!
தகாத வார்த்தைகள்
தெரியாமல் செய்துவிட்டேன் என்று சுரேஷ் கூறிய பிறகும் கூட, அவரை விடாமல் வெளியே வாடா, போடா என்றும் தகாத வார்த்தைகளால் பேசினார் சனம் ஷெட்டி. இதனை பார்த்த நெட்டிசன்கள் சனம் ஷெட்டியை கடுமையாக விமர்சித்தனர்.
அகம் டிவி வழியே
இதுகுறித்து கமல் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்றும் சனம் ஷெட்டியை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார் கமல்.
ஒப்புக்கொண்ட சுரேஷ்
அப்போது டாஸ்க்கின் போது நடந்த விவகாரம் குறித்து விசாரித்தார் கமல். அப்போது தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி, கமலின் வேண்டுகோளுக்கிணங்க பிக்பாஸிடம் பேசியதை மீண்டும் பேசினார்.
இங்கீதம் இழந்த சனம்
அப்போது சனம் ஷெட்டியிடமும் நடந்த விவகாரம் குறித்து விசாரித்த கமல், என்ன பேச வேண்டும் என்ற இங்கீதத்தை இழந்து விட்டதாக கூறினார். மேலும் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் ஆனால் ஒரு மனிதருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்றார்.
மன்னிப்பு கேட்கவில்லை
இதனை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தான் அப்படி பேசியிருக்கக் கூடாது. நான் பேசியதெல்லாம் தவறுதான் என்ற சனம் ஷெட்டி, அதற்காக வருத்தப்படுவதாகவும் கூறினார். தான் ஒரு குழந்தை போல கோபத்தில் நடந்து கொண்டதாக கூறினார். வார்த்தைக்கு வார்த்தை வருத்தம் தெரிவித்த சனம் ஷெட்டி ஒரு இடத்தில் கூட மன்னிப்பு கேட்கவில்லை.
Recommended Video
மன்னிபே வரலையே
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் குறைந்துவிடுவீர்களா என மீண்டும் விளாசி வருகின்றனர். கமல் முன்னிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் மன்னிப்பு கேட்ட நிலையில் சனம் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.