Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஏய்.. நீ வெளியே வாடா.. சுரேஷ் சக்ரவர்த்தியை படுகேவலமாக திட்டிய சனம்.. அனல் பறக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாடா இல்ல காடா டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் பாகத்தில் நேற்று அரக்கக் குடும்பமாய் இருந்தவர்கள் இன்று அரச குடும்பமாய் மாறியுள்ளனர்.
காலையில் ஆரி, பாலாஜியுடன் மல்லுக்கட்டிய புரமோ வெளியானது. அந்த பீதி அடங்குவதற்குள் மற்றொரு புரமோ வெளியாகி மிரள விட்டுள்ளது.
நடுவுல வந்தேன்.. நடுவுலேயே போய்டுறேன்.. பீட்டரை நீங்களே வச்சுக்கோங்க ஹெலன்.. எஸ்கேப்பாகும் வனிதா!
சனம் மீது பட
அதாவது, இரண்டாவது புரமோவில் அரசரான சுரேஷ் சக்கரவர்த்தி தனது கையில் வைத்திருக்கும் ஆயுதத்தால் இடையில் மறைத்திருக்கும் துணியை விலக்க முயற்சிக்கிறார். அப்போது அந்த ஆயுதம் சனம் ஷெட்டியின் நெற்றியில் பட்டதாக தெரிகிறது.
அந்தாளு கொடுப்பானா?
இதனால் ஆத்திரமடையும் சனம் ஷெட்டி, இன்னும் ஒரு இன்ச் கீழே பட்டிருந்தால் என் கண்ணு போயிருக்கும் அந்தாளு கொடுப்பானா? என்ன நினைச்சுட்டு இருக்கான் அந்தாளு? என கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் பேசுகிறார்.
மூளை கெட்டுப் போச்சா?
உடனே சப்போர்ட்டுக்கு வரும் பாலாஜி, உங்களுக்கு மூளை கெட்டுப் போச்சா என்கிறார். அதற்கு மூளையே இல்ல என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. மூளை இல்லன்னா இங்க என்ன பண்றீங்க என மீண்டும் எகுறுகிறார் சனம் ஷெட்டி.
ஏய் வெளியே வாடா
பெட்டில் போய் படுக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. மீண்டும் விடாத சனம் ஷெட்டி, எனக்கும் மனசு இருக்கு.. ஏய் நீ வெளியே வாடா இப்போ என சுரேஷ் சக்கரவர்த்தியை அழைக்கிறார். அதற்கு நீங்க பண்ணலாம், நாங்க பண்ணக்கூடாதா என கேட்டப்படி உள்ளே படுத்திருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.
பகீர் கிளப்பும் புரமோ
பார்க்கும் போதே பகீர் கிளப்புகிறது பிக்பாஸின் இன்றைய இரண்டாவது புரமோ. ஏற்கனவே அனிதா சம்பத், ரியோ ஆகியோர் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டனர். இந்நிலையில் அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் சனம் ஷெட்டி போடா வாடா என பேசுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.