இங்கே பிளர்ட் பண்ணிட்டு இருக்கேனா.. எதுக்கு அந்த டாஸ்க் கொடுக்றீங்க.. சோமிடம் பொங்கிய சனம் ஷெட்டி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மார்னிங் ஆக்ட்டிவிட்டியில் தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் சனம் ஷெட்டி கடுப்பாகி விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள் தோறும் மார்னிங் ஆக்டிவிட்டி என சில சுவாரசியமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
சுண்டல் விற்பது, ஜோசியம் சொல்வது, ராசிப்பலன் சொல்வது என பல டாஸ்க்குகள் இதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் வந்தது
கடந்த சில நாட்களாய் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் மார்னிங் ஆக்ட்டிவிட்யை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றைய எபிசோடில் மார்னிங் ஆக்டிவிட்டி கொடுக்கப்பட்டது.

பல குமாரகள்
இதில் குமார் என்பதை எத்தனை மாடுலேஷனில் சொல்லலாம் என சோம சேகருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சோக குமார், வெட்க குமார், கோப குமார் என பல குமார்களை கொண்டு வந்தார் சோம சேகர்.

பிளர்ட் குமார்
இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களையும் அந்த டாஸ்கை செய்யுமாறு கூறிய சோம் முதல் ஆளாய் சனம் ஷெட்டியை அழைத்து பிளர்ட் குமார் மற்றும் மசாஜ் குமாராய் நடிக்க சொன்னார்.

பிளர்ட் செய்த சனம்
டாஸ்க்கை ஏற்றுக்கொண்ட சனம், பிளர்ட் செய்தார். மசாஜ் குமாராகி மசாஜ் செய்து விடுகிறேன் வா என்றும் அழைத்தார். அதற்கு சோம் ரொம்பவே பிகு பண்ணினார். இருந்த போதும் டாஸ்க் குறை சொல்லும்படியாக இல்லை.

அப்செட்டான சனம்
இந்நிலையில் டாஸ்க் முடிந்த பிறகு, கார்டன் ஏரியாவில் அப்செட்டிடில் அமர்ந்திருந்த சனம் ஷெட்டியிடம் என்னாச்சு என்றார் சோம். அதற்கு பதில் சொன்ன சனம் ஷெட்டி, எனக்கு மட்டும் ஏன் அதுபோன்ற டாஸ்க்கே கொடுக்றீங்க. எனக்கு ஃபிளர்ட் பண்ண பிடிக்காது.

வருத்தப்பட்ட சனம்
இதை ஏற்கனவே சொல்லியிருக்கேன். திரும்ப திரும்ப ஏன் எனக்கு இந்த மாதிரி டாஸ்க் கொடுக்றீங்க? பார்க்குறவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க நான் இங்க மசாஜ் பண்ணிவிட்டுட்டுருக்கேன், பிளர்ட் பண்றேன்னுதான் நினைப்பாங்க என்று ரொம்பவே வருத்தப்பட்டார்.

மன்னிப்பு கேட்ட சோம்
இதனைக் கேட்ட சோம், சனம் ஷெட்டியிடம் இனிமே இதுபோன்ற டாஸ்க் கொடுக்க மாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டார். மேலும் சனம் வருத்தப்பட்டது குறித்து, பிக்பாஸிடமும் விளக்கம் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











