கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சூது கவ்வும் நடிகை !
சென்னை : நடிகை சஞ்சிதா ஷெட்டி கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டார்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் விஜய்சேதுபதியுடன் சூது கவ்வும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

அதி தீவிரமாக
இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,46,116 ஆக உயர்ந்துள்ளது.

முழு ஊரடங்கு
தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இன்று காலை 4 மணி முதல் 24-ம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வேதனை அளிக்கிறது
மேலும், கொரோனாவுக்கு பல திரைப்பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இதனால் தமிழ் திரைத்துறை கடும் சோகத்தில் ழூழ்கி உள்ளது. அதேபோல நேற்று, மூத்த நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
Recommended Video

முதல் தடுப்பூசி
இதனால் திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் அருண்விஜய், நடிகை சிம்ரன், காஜல் அகர்வால், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி இன்று முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











