Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
350 அரங்குகளில் சரத்குமாரின் சண்டமாருதம்... ஹீரோவாக ஒரு அதிரவைக்கும் மறுபிரவேசம்!
சரத்குமார் 2 வேடங்களில் நடித்த ‘சண்டமாருதம்' படம் 350 க்கும் அதிகமான அரங்குகளில் தமிழகம் மற்றும் மும்பையில் வெளியாகிறது.
சரத்குமார் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், ‘சண்டமாருதம்.' இதில் ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூன்று பேரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.
சரத்குமார் பேட்டி
இந்தப் படம் குறித்து சரத்குமார் நேற்று கூறுகையில், "சண்டமாருதம் படம், வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 250 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. சென்னை நகர வினியோக உரிமையை ‘கலைப்புலி' எஸ்.தாணு வாங்கியிருக்கிறார்.
வெளிமாநிலங்களில்
தமிழ்நாட்டில் திரையிடப்பட இருக்கும் 20-ந் தேதியே மும்பை, டெல்லி மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் படம் திரையிடப்படுகிறது. வெளி மாநிலங்களில் மட்டும் சுமார் 100 தியேட்டர்களில் படம் திரையிடப்பட உள்ளது. ஒரு வாரம் கழித்து ஆந்திராவில் படம் வெளியிடப்படும்,'' என்றார்.
சண்டமாருதம்
இயக்குநர் ஏ வெங்கடேஷ் கூறுகையில், "பணம்...பணம்...என்று அதைத் தேடி அலையும் வில்லனையும், அவனுக்கு எதிராக களம் இறக்கிவிடப்படும் ‘என்கவுன்டர்' போலீஸ் அதிகாரியையும் பற்றிய கதை இது. ‘சண்டமாருதம்' என்றால் புயலை மிஞ்சிய காற்று என்று அர்த்தம். புயல் போன்ற வில்லனையும், அவனைத் தாண்டிய போலீஸ் அதிகாரியையும் கதை சித்தரிக்கிறது.
சரத்குமார் கதை
25 வருடங்களுக்குப்பின், சரத்குமார் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். புயல் போன்ற வில்லனை தென்றல் போன்ற கதாநாயகன் எப்படி தாக்குகிறார்? என்பதே திரைக்கதை. கதையை சரத்குமார் எழுதியிருக்கிறார்.
எழுத்தாளர் ராஜேஷ்குமார்
தமிழ் சினிமாவில் முதன்முதலாக, இந்த படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார், எழுத்தாளர் ராஜேஷ்குமார். கூடுதல் திரைக்கதை அமைத்து நான் இயக்கியுள்ளேன்," என்றார்.