விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ரொம்ப பொறுமைசாலியாம்.. அப்படியே அப்பா மாதிரி..சிக்மா ஹீரோ ஓபன் டாக்
சென்னை: நடிகரும், முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். அவர் இப்போது சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜூலை 31ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இதுதான் ஜேசனின் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்நிலையில் ஜேசன் குறித்து சிக்மா ஹீரோ சந்தீப் கிஷன் ஓபனாக பேசியிருக்கிறார்.
விஜய் நடித்த போக்கிரி, வேட்டைக்காரன் படங்களில் தலை காட்டிய அவரது மகன் ஜேசன் சஞ்சய் நடிகர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தன் தந்தை வழியை தேர்ந்தெடுக்காமல் தன் தாத்தா வழியை தேர்ந்தெடுத்து இயக்குநராகியிருக்கிறார். இயக்கம் மற்றும் எடிட்டிங் தொடர்பான படிப்பை வெளிநாட்டுக்கு சென்று படித்த ஜேசன்; ஒரு குறும்படத்தையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்பு: சூழல் இப்படி இருக்க லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிக்மா படத்தை இயக்க வாய்ப்பை பெற்றார். அதில் ஹீரோவாக சந்தீப் கிஷன் கமிட்டானார். ராஜு சுந்தரம் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பில் படம் உருவாகியிருக்கிறது. விஜய் மகன் இயக்கும் முதல் படம் என்பதால் இப்படத்தின் மீது ஆவல் அதிகரித்திருக்கிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் உள்ளிட்ட அப்டேட்டுகளும் ரசிக்கும்படியாகவே இருந்தன.
ஜூலை 31ல் ரிலீஸ்: படமானது ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் ஜேசன் சஞ்சய் பார்த்து பார்த்து செய்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. முதல் படத்திலேயே மெகா ஹிட்டை கொடுக்க வேண்டும் என்பதில் ரொம்பவே தீவிரமாக இருக்கிறாராம்.
சந்தீப் கிஷன் பேட்டி: இநிந்லையில் விஜய் மகனுடன் பணியாற்றியது குறித்து சிக்மா ஹீரோ சந்தீப் கிஷன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார். அந்தப் பேட்டியில் அவர், "ஜேசன் சஞ்சய் ரொம்பவே கடினமாக உழைக்கும் இளைஞர். அவரும், அவரது டீமும் இந்தப் படத்துக்காக நீண்ட காலமாக உழைத்திருக்கிறார்கள். ப்ரீ ப்ரொடக்ஷன் பணியிலிருந்து எடிட்டிங்வரை அனைத்திலுமே ஈடுபாட்டுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.
நிறைய கற்றுக்கொள்ளலாம்: ஜேசனிடமிருந்து பொறுமையை நிறையவே கற்றுக்கொள்ளலாம். அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். 25 வயதுதான் ஆகிறது. இந்த வயதிலேயே இயக்குநராக அவர் காட்டிய பொறுமை, அமைதி, நோக்கத்தில் இருந்த தெளிவுகள் எல்லாம் என்னை மேற்கொண்டு மேற்கொண்டு வியப்பில்தான் தள்ளியது.
முறையாக படித்திருக்கிறார்: அவர் இயக்கம் மற்றும் படத்தொகுப்பு குறித்து முறையாக படித்திருக்கிறார். இவ்வளவு இளம் வயதுடைய ஒரு திரைப்பட இயக்குநருடன் வேலை செய்து நீண்ட நாட்களாகிவிட்டது. அவர் தோற்றத்தில் அப்படியே அவரது தந்தை மாதிரியே இருக்கிறார். அதைவிட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதாவது அவரிடம் இருக்கும் எளிமையும், பணிவும் என்னை அதிகம் ஆச்சரியப்படுத்தியது" என்றார்.


Click it and Unblock the Notifications
