Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு 'இவர்' தாங்க இனி பி, சி சென்டர் கிங்: சுசீந்திரன்
சென்னை: தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு பி அன்ட் சி ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நான் நம்புகிறேன் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நெஞ்சில் துணிவிருந்தால். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் சுசீந்திரன் பேசியதாவது,
விஜய் சேதுபதி
இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் பற்றி சொல்ல வேண்டும். சந்தீப் இந்த படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு பி அன்ட் சி ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நான் நம்புகிறேன்.
உழைப்பாளி
இந்த படத்தில் சந்தீப்பிடம் நான் மிகச் சிறந்த நடிகனை பார்த்திருக்கிறேன். கிளைமாக்ஸில் அருமையாக நடித்துள்ளார். இது அவருக்கு 50 சதவீதம் தான். அவரின் திறமைக்கு ஏற்ற தீணி இனி நிறைய உள்ளது.
பெருமை
இந்த படத்தின் மூலம் நான் சந்தோஷப்படக்கூடிய விஷயம் விக்ராந்த். என்னுடயை ஹீரோன்னு நான் பெருமையாக சொல்லிக்கக் கூடியவர் விக்ராந்த்.
கதாபாத்திரம்
பாண்டிய நாடு படத்தில் சின்ன கதாபாத்திரம் தான் விக்ராந்துக்கு. இந்த படத்தில் அவருக்கு பெரிய கதாபாத்திரம். படம் முழுக்க வருவார். அவருக்கு ஃபைட், சாங் எல்லாம் உண்டு என்றார் சுசீந்திரன்.