Don't Miss!
- News சென்னைக்கு வெளியே போறீங்களா? வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. போக்குவரத்தே மாற போகுது
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
பகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்
Recommended Video
ஹைதராபாத்: பகலில் அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் சந்தியா நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஸ்ரீ ரெட்டியை சக நடிகைகளே மோசமாக பேசினார்கள்.
இந்நிலையில் அபூர்வா என்கிற பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு அளித்தார்.
ஸ்ரீ ரெட்டி
அபூர்வா ஆதரவு அளித்த பிறகு பிற நடிகைகளும் ஸ்ரீ ரெட்டியை ஆதரிக்கிறார்கள். மேலும் தாமாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக டிவி சேனல்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கியுள்ளனர்.
அம்மா
அம்மா, ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சந்தியா நாயுடு கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார். படுக்கைக்கு சென்றால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் சந்தியா.
இரவு
பகலில் என்னை அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு வருமாறு கூறுகிறார்கள். வீட்டிற்கு சென்றதும் வாட்ஸ்ஆப் மூலம் அவர்களுடன் சாட் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று சந்தியா தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்ஆப்
விருப்பம் இல்லாவிட்டாலும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ய வேண்டி உள்ளது. ஒருவர் வாட்ஸ்ஆப் சாட்டின்போது நான் என்ன உடை அணிந்திருக்கிறேன், அது லேசான துணியா என்று கேட்டார் என கூறி வருத்தப்பட்டார் சந்தியா.