Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்
Recommended Video
ஹைதராபாத்: பகலில் அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் சந்தியா நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஸ்ரீ ரெட்டியை சக நடிகைகளே மோசமாக பேசினார்கள்.
இந்நிலையில் அபூர்வா என்கிற பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு அளித்தார்.
ஸ்ரீ ரெட்டி
அபூர்வா ஆதரவு அளித்த பிறகு பிற நடிகைகளும் ஸ்ரீ ரெட்டியை ஆதரிக்கிறார்கள். மேலும் தாமாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக டிவி சேனல்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கியுள்ளனர்.
அம்மா
அம்மா, ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சந்தியா நாயுடு கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார். படுக்கைக்கு சென்றால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் சந்தியா.
இரவு
பகலில் என்னை அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு வருமாறு கூறுகிறார்கள். வீட்டிற்கு சென்றதும் வாட்ஸ்ஆப் மூலம் அவர்களுடன் சாட் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று சந்தியா தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்ஆப்
விருப்பம் இல்லாவிட்டாலும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ய வேண்டி உள்ளது. ஒருவர் வாட்ஸ்ஆப் சாட்டின்போது நான் என்ன உடை அணிந்திருக்கிறேன், அது லேசான துணியா என்று கேட்டார் என கூறி வருத்தப்பட்டார் சந்தியா.