Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சண்டி வீரனுக்கு சிங்கப்பூரில் தடை
சென்னை: சண்டி வீரன் திரைப்படத்தை வெளியிட சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் நாட்டில் வழங்கப்படும் ஒரு தண்டனையைப் பற்றி படத்தில் விமர்சனம் செய்யப்பட்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
களவாணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சற்குணம், இயக்கியுள்ள படம் 'சண்டி வீரன்'. இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தில் அதரவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக 'கயல்' ஆனந்தி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் லால் நடித்துள்ளார்.இன்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இளைஞன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாகிறான். அப்போது அவனுக்கு ஏற்படும் சில பிரச்சினைகளை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை என்று சற்குணம் கூறியுள்ளார்.
இந்தப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் நாட்டில் கொடுக்கப்படும் தண்டனையைப் பற்றி இந்தப்படம் விமர்சனம் செய்யப்படுவதால் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படத்திற்கு தடை விதிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று இயக்குநர் சற்குணம் கருத்து தெரிவித்துள்ளார்.