Don't Miss!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
சண்டி வீரனுக்கு சிங்கப்பூரில் தடை
சென்னை: சண்டி வீரன் திரைப்படத்தை வெளியிட சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் நாட்டில் வழங்கப்படும் ஒரு தண்டனையைப் பற்றி படத்தில் விமர்சனம் செய்யப்பட்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
களவாணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சற்குணம், இயக்கியுள்ள படம் 'சண்டி வீரன்'. இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தில் அதரவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக 'கயல்' ஆனந்தி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் லால் நடித்துள்ளார்.இன்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இளைஞன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாகிறான். அப்போது அவனுக்கு ஏற்படும் சில பிரச்சினைகளை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை என்று சற்குணம் கூறியுள்ளார்.
இந்தப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் நாட்டில் கொடுக்கப்படும் தண்டனையைப் பற்றி இந்தப்படம் விமர்சனம் செய்யப்படுவதால் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படத்திற்கு தடை விதிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று இயக்குநர் சற்குணம் கருத்து தெரிவித்துள்ளார்.