Don't Miss!
- News அந்த ஜூஸ், மோர் தான் காரணமா? மயக்கம், நெஞ்சு வலி.. விஷ முறிவு மருந்து எடுத்துக்கொண்ட மன்சூர் அலிகான்
- Finance மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு.. அதுவும் எலான் மஸ்க் இந்தியா வரும் நேரத்தில்.. வாவ்..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி!
Recommended Video
சென்னை: கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் பனிப்போர் நீடிக்கும் நிலையில் தன்னை மட்டும் தவறாக நினைக்க வேண்டாம் என கவினிடம் உருகியுள்ளார் சாண்டி.
பிக்பாஸ் வீட்டில் கவினும் சாண்டியும் நெருக்கமான நண்பர்களாக வலம் வந்தனர். சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கவினுக்கும் சாண்டிக்கும் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் கவினுக்கு பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது காதல் லாஸ்லியா மீது வந்தது. இருவரும் காதலித்து வருகின்றனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினுடன் சுற்றி வருகிறார் லாஸ்லியா.
வலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்! வைரல் வீடியோ
மனஸ்தாபங்கள்
இந்நிலையில் லாஸ்லியாவுக்காக தனது நண்பரையே சந்தேகப்பட தொடங்கிவிட்டார் கவின். சாண்டி லாஸ்லியாவை கிண்டல் செய்வதை கவின் விரும்பவில்லை. இதனால் அடிக்கடி இருவருக்குள்ளும் மனஸ்தாபங்கள் வந்தன.
மல்லுக்கு நின்ற கவின்
நேற்றைய டாஸ்க்கில் கூட சாண்டி, லாஸ்லியா மீது தெரியாமல் இடிக்க, கீழே விழுந்தார் லாஸ்லியா. இதனால் கோபப்பட்ட கவின், சாண்டியிடம் எகிறினார். தெரியாமல் நடந்துவிட்டது என சாண்டி கூற, கவின் நீ வேண்டும் என்றே செய்தாய் என மல்லுக்கு நின்றார்.
கண்டுகொள்ளாத கவின்
இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் கவினுக்கு நீங்கள் க்ளோஸ் ஃபிரன்டு என்றால் விட்டுக்கொடுங்கள் அவருக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று சாண்டியிடம் சண்டை போட்டார் லாஸ்லியா. அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை கவின்.
கடுப்பான தர்ஷன்
இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவிலும் லாஸ்லியாவும் கவினும் சாண்டியை கார்னர் செய்தனர். இதனால் கடுப்பான தர்ஷன், சாண்டிக்கு ஆதரவாக கவினிடம் சண்டை போட்டார்.
தப்பா நினைச்சுடாதடா
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் சாண்டி தனது நியாயத்தையும் தான் செய்ததையும் கவினிடம் எமோஷனலாக பேசி எடுத்து கூறுகிறார். மேலும் நான் உனக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான், என்னை மட்டும் தப்பா நினைச்சுடாதடா என்று கூறுகிறார் சாண்டி.
என்ன ரியாக்ஷன்
சாண்டி பேசுவதையெல்லாம் அமைதியாக கேட்டுகொண்டிருக்கிறார் கவின். இதனை தொடர்ந்து சாண்டியின் குமுறலுக்கு கவின் என்ன ரியாக்ட் செய்யப் போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.