Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி!
Recommended Video
சென்னை: கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் பனிப்போர் நீடிக்கும் நிலையில் தன்னை மட்டும் தவறாக நினைக்க வேண்டாம் என கவினிடம் உருகியுள்ளார் சாண்டி.
பிக்பாஸ் வீட்டில் கவினும் சாண்டியும் நெருக்கமான நண்பர்களாக வலம் வந்தனர். சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கவினுக்கும் சாண்டிக்கும் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் கவினுக்கு பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது காதல் லாஸ்லியா மீது வந்தது. இருவரும் காதலித்து வருகின்றனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினுடன் சுற்றி வருகிறார் லாஸ்லியா.
வலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்! வைரல் வீடியோ
மனஸ்தாபங்கள்
இந்நிலையில் லாஸ்லியாவுக்காக தனது நண்பரையே சந்தேகப்பட தொடங்கிவிட்டார் கவின். சாண்டி லாஸ்லியாவை கிண்டல் செய்வதை கவின் விரும்பவில்லை. இதனால் அடிக்கடி இருவருக்குள்ளும் மனஸ்தாபங்கள் வந்தன.
மல்லுக்கு நின்ற கவின்
நேற்றைய டாஸ்க்கில் கூட சாண்டி, லாஸ்லியா மீது தெரியாமல் இடிக்க, கீழே விழுந்தார் லாஸ்லியா. இதனால் கோபப்பட்ட கவின், சாண்டியிடம் எகிறினார். தெரியாமல் நடந்துவிட்டது என சாண்டி கூற, கவின் நீ வேண்டும் என்றே செய்தாய் என மல்லுக்கு நின்றார்.
கண்டுகொள்ளாத கவின்
இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் கவினுக்கு நீங்கள் க்ளோஸ் ஃபிரன்டு என்றால் விட்டுக்கொடுங்கள் அவருக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று சாண்டியிடம் சண்டை போட்டார் லாஸ்லியா. அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை கவின்.
கடுப்பான தர்ஷன்
இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவிலும் லாஸ்லியாவும் கவினும் சாண்டியை கார்னர் செய்தனர். இதனால் கடுப்பான தர்ஷன், சாண்டிக்கு ஆதரவாக கவினிடம் சண்டை போட்டார்.
தப்பா நினைச்சுடாதடா
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் சாண்டி தனது நியாயத்தையும் தான் செய்ததையும் கவினிடம் எமோஷனலாக பேசி எடுத்து கூறுகிறார். மேலும் நான் உனக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான், என்னை மட்டும் தப்பா நினைச்சுடாதடா என்று கூறுகிறார் சாண்டி.
என்ன ரியாக்ஷன்
சாண்டி பேசுவதையெல்லாம் அமைதியாக கேட்டுகொண்டிருக்கிறார் கவின். இதனை தொடர்ந்து சாண்டியின் குமுறலுக்கு கவின் என்ன ரியாக்ட் செய்யப் போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.