Don't Miss!
- News தேர்தல் முடிந்த உடன் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பார்.. கொங்கு நாடு ஈஸ்வரன் பரபர குற்றச்சாட்டு!
- Finance தங்கம் விலை ஒரே நாளில் ரூ.880 உயர்வு, இனி தங்கத்தை மறந்திடவேண்டியது தான்..!!
- Automobiles 73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
- Technology அய்யய்யோ.. உடனே இந்த 3 App-களையும் DELETE பண்ணிடுங்க.. அப்புறம் நாங்க பொறுப்பு இல்ல.. ஆய்வாளர்கள் அலெர்ட்!
- Sports இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட திட்டம்.. ரோஹித் - அகர்கர் சந்திப்பில் ட்விஸ்ட்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களுக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
தறி.. நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன்.. இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ்!
Recommended Video
சென்னை : தறி எனும் நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன் என்று இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ் பேசினார்.
நடிகர் சமுத்திரகனி நாயகனாக நடித்து வெளியாக போகும் படம் தான் சங்கத்தலைவன். இந்த படத்தை உதயகுமார் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தை இயக்கியிருக்கிறார் மணிமாறன். படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் ராபர்ட் சற்குணம் .
சங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் படத்தை பற்றிய தங்கள் கருத்துகளை நேற்று பகிர்ந்து இருந்தனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் மற்றும் சங்கத்தலைவன் தயாரிப்பாளரான வெற்றிமாறன், படத்தில் கதை கேட்ட பின் கட்டாயம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது பின் உதய் புரொடக்ஷ்னுடன் இணைந்து படத்தை தயாரித்தேன் என கூறினார் .
சமுத்திரகனி இல்லையென்றால் இந்த படம் இல்லை என பலரும் கூறினார்கள். இந்த கதை இயக்குனர் மணிமாறனால் உறுதி செய்யபட்ட பின் சத்யராஜ் அல்லது சமுத்திரகனி நடிக்க சம்மதித்தால் மட்டுமே படத்தை எடுக்க போகிறோம் என கூறப்பட்டது. ஆனால் சமுத்திரகனி ஒத்து கொண்டதால் படம் தற்போது வெளியாகும் நிலைக்கு வந்துள்ளது என கூறப்பட்டது .
விழாவில் பேசிய கருணாஸ் 4 வருடங்களுக்கு பின்பு பட விழாக்களில் கலந்து கொண்டது. கடந்த சில வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்கவும் இல்லை பட விழாக்களில் பங்கு கொள்ளவும் இல்லை. பல வருடங்கள் கழித்து சங்கத்தலைவன் படத்தில் நடித்து இருக்கிறேன் என்றார்.
மேலும் சங்கத்தலைவன் படம் தறி எனும் நாவலில் இருந்து படமாக்கபட்டிருக்கிறது என கருணாஸ் கூறினார். மேலும் இந்த படத்தின் இயக்குனர் மணிமாறனை எனக்கு பல வருடங்களாக தெரியும் என கூறியுள்ளார் . இயக்குனர்கள் மணிமாறன் மற்றும் வெற்றிமாறன் இருவரும் பாலு மஹேந்திராவின் உதவி இயக்குனர்கள். இவர்கள் இருவரும் படத்தின் டிஸ்கஷன் நேரங்களில் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள்.
நான் அதை பார்த்து எல்லாம் என்னடா இப்படி சண்டை போடுகிறார்களே நினைத்ததுண்டு. ஆனால் ஒரு நல்ல கதைக்காக சண்டையிடுவது தப்பில்லை என பிறகு உணர்ந்தேன் என கருணாஸ் கூறினார்.
வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ஒரு சிறிய படத்தை இயக்கி வருகிறார் அதன் பின் வாடிவாசல் படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது நடிகர் கருணாஸ் இந்த படத்தையடுத்து திரௌபதி படத்தில் நடித்திருக்கிறார்.