Don't Miss!
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தறி.. நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன்.. இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ்!
Recommended Video
சென்னை : தறி எனும் நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன் என்று இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ் பேசினார்.
நடிகர் சமுத்திரகனி நாயகனாக நடித்து வெளியாக போகும் படம் தான் சங்கத்தலைவன். இந்த படத்தை உதயகுமார் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தை இயக்கியிருக்கிறார் மணிமாறன். படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் ராபர்ட் சற்குணம் .
சங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் படத்தை பற்றிய தங்கள் கருத்துகளை நேற்று பகிர்ந்து இருந்தனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் மற்றும் சங்கத்தலைவன் தயாரிப்பாளரான வெற்றிமாறன், படத்தில் கதை கேட்ட பின் கட்டாயம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது பின் உதய் புரொடக்ஷ்னுடன் இணைந்து படத்தை தயாரித்தேன் என கூறினார் .
சமுத்திரகனி இல்லையென்றால் இந்த படம் இல்லை என பலரும் கூறினார்கள். இந்த கதை இயக்குனர் மணிமாறனால் உறுதி செய்யபட்ட பின் சத்யராஜ் அல்லது சமுத்திரகனி நடிக்க சம்மதித்தால் மட்டுமே படத்தை எடுக்க போகிறோம் என கூறப்பட்டது. ஆனால் சமுத்திரகனி ஒத்து கொண்டதால் படம் தற்போது வெளியாகும் நிலைக்கு வந்துள்ளது என கூறப்பட்டது .
விழாவில் பேசிய கருணாஸ் 4 வருடங்களுக்கு பின்பு பட விழாக்களில் கலந்து கொண்டது. கடந்த சில வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்கவும் இல்லை பட விழாக்களில் பங்கு கொள்ளவும் இல்லை. பல வருடங்கள் கழித்து சங்கத்தலைவன் படத்தில் நடித்து இருக்கிறேன் என்றார்.
மேலும் சங்கத்தலைவன் படம் தறி எனும் நாவலில் இருந்து படமாக்கபட்டிருக்கிறது என கருணாஸ் கூறினார். மேலும் இந்த படத்தின் இயக்குனர் மணிமாறனை எனக்கு பல வருடங்களாக தெரியும் என கூறியுள்ளார் . இயக்குனர்கள் மணிமாறன் மற்றும் வெற்றிமாறன் இருவரும் பாலு மஹேந்திராவின் உதவி இயக்குனர்கள். இவர்கள் இருவரும் படத்தின் டிஸ்கஷன் நேரங்களில் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள்.
நான் அதை பார்த்து எல்லாம் என்னடா இப்படி சண்டை போடுகிறார்களே நினைத்ததுண்டு. ஆனால் ஒரு நல்ல கதைக்காக சண்டையிடுவது தப்பில்லை என பிறகு உணர்ந்தேன் என கருணாஸ் கூறினார்.
வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ஒரு சிறிய படத்தை இயக்கி வருகிறார் அதன் பின் வாடிவாசல் படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது நடிகர் கருணாஸ் இந்த படத்தையடுத்து திரௌபதி படத்தில் நடித்திருக்கிறார்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!