Don't Miss!
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா பாதிப்பு.. இயக்குனர் சங்கீத் சிவன் உடல் நிலையில் முன்னேற்றம்.. சந்தோஷ் சிவன் தகவல்!
கொச்சி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சங்கீத் சிவன் உடல் நிலை, நன்றாக இருப்பதாக அவர் சகோதரர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.
பிரபல மலையாள இயக்குனர் சங்கீத் சிவன். இவர் இயக்கிய சில மலையாள படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றன.
இவர் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.
தமிழில் அசோகன்
இந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். இவர், மோகன்லால், மது, ஊர்வசி நடிப்பில் யோதா என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்த படம், தமிழில் அசோகன் என்ற பெயரில் வெளியானது. அடுத்து அரவிந்த்சாமி, கவுதமி நடித்த டாடி என்ற மலையாளப் படத்தை இயக்கி இருந்தார்.
டாடி மம்மி
இது, தமிழில் டாடி மம்மி என்ற பெயரில் வெளியானது. ஜானி, கந்தர்வம், நிர்ணயம், இடியட்ஸ் உட்பட பல மலையாளப் படங்களை இயக்கியுள்ள சங்கீத் சிவன், இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார். சன்னி தியோல், சுஷ்மிதா நடித்த ஸோர், துஷார் கபூர் நடித்த கியா கூல் ஹே தும், தெலுங்கு ஒத்தடு ரீமேக்கான ஏக் உட்பட சில படங்களை இயக்கினார்.
கொரோனா பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன், சங்கீத் சிவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆனது.
இதையடுத்து கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் கண்காணிப்பு
அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.
உடல்நிலை முன்னேற்றம்
இந்நிலையில், அவர் இப்போது நன்றாக குணமடைந்து வருகிறார் என்று அவருடைய சகோதரர் சந்தோஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். செயற்கை சுவாசக் கருவி நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் உடல்நிலை இப்போது முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் ரசிகர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.