Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கொரோனா பாதிப்பு.. இயக்குனர் சங்கீத் சிவன் உடல் நிலையில் முன்னேற்றம்.. சந்தோஷ் சிவன் தகவல்!
கொச்சி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சங்கீத் சிவன் உடல் நிலை, நன்றாக இருப்பதாக அவர் சகோதரர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.
பிரபல மலையாள இயக்குனர் சங்கீத் சிவன். இவர் இயக்கிய சில மலையாள படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றன.
இவர் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.
தமிழில் அசோகன்
இந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். இவர், மோகன்லால், மது, ஊர்வசி நடிப்பில் யோதா என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்த படம், தமிழில் அசோகன் என்ற பெயரில் வெளியானது. அடுத்து அரவிந்த்சாமி, கவுதமி நடித்த டாடி என்ற மலையாளப் படத்தை இயக்கி இருந்தார்.
டாடி மம்மி
இது, தமிழில் டாடி மம்மி என்ற பெயரில் வெளியானது. ஜானி, கந்தர்வம், நிர்ணயம், இடியட்ஸ் உட்பட பல மலையாளப் படங்களை இயக்கியுள்ள சங்கீத் சிவன், இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார். சன்னி தியோல், சுஷ்மிதா நடித்த ஸோர், துஷார் கபூர் நடித்த கியா கூல் ஹே தும், தெலுங்கு ஒத்தடு ரீமேக்கான ஏக் உட்பட சில படங்களை இயக்கினார்.
கொரோனா பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன், சங்கீத் சிவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆனது.
இதையடுத்து கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் கண்காணிப்பு
அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.
உடல்நிலை முன்னேற்றம்
இந்நிலையில், அவர் இப்போது நன்றாக குணமடைந்து வருகிறார் என்று அவருடைய சகோதரர் சந்தோஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். செயற்கை சுவாசக் கருவி நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் உடல்நிலை இப்போது முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் ரசிகர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.