Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை சங்கீதா-நிபந்தனை தளர்வு
புதுமுக இயக்குநர் செல்வா கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ள புதுமுக நடிகை சங்கீதாவின் ஜாமீன் நிபந்தனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டது.
சென்னை வடபழனியில் அறையில் தங்கியிருந்த இயக்குநர் செல்வா மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் கொலை செய்ததாக செல்வாவின் படத்தில் நடித்து வந்த சங்கீதாவைப் போலீஸார் கைது செய்தனர்.அதன் பின்னர் சங்கீதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன்படி மதுரை ஒத்தக்கடையில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்துப் போட்டு வந்தார் சங்கீதா.
இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி சங்கீதா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், தன் மீதான வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரியிருந்தார் சங்கீதா.
இதை இன்று விசாரித்த நீதிபதி ரகுபதி, சங்கீதா மதுரையில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.