Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெப் சீரிஸ் மூலம்.. நடிகை ஆகிறார், பிரபல டென்னிஸ் வீராங்கனை.. இம்மாத இறுதியில் ரிலீஸ்!
மும்பை: பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகிறார்.
பிரபல விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன.
அதில், நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்போதும் சில வீராங்கனைகளின் பயோபிக் படமாக்கப்பட்டு வருகிறது.
எம்டிவி நிஷேத்
ஆனால், பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, வெப் சீரிஸ் ஒன்றில் அவரே நடிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் வெளியான தொடர், எம்டிவி நிஷேத். பாலியல், கருக்கலைப்பு உள்ளிட்ட விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தொடர் உருவாக்கப்பட்டது.
நல்ல வரவேற்பு
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இதன் அடுத்த பகுதியை உருவாக்க இருக்கின்றனர். இதற்கு, எம்டிவி நிஷேத் அலோன் டு கெதர் என்று தலைப்பிட்டுள்ளனர். காசநோய் (டிபி)குறித்த விழிப்புணர்வு இந்தத் தொடரின் மையமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீராத நோய்களில்
இந்தத் தொடரில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, முதன்முறையாக நடிகையாக அறிமுகமாகிறார். இதில் அவர் அவராகவே நடிக்க இருக்கிறார். இதுபற்றி சானியா மிர்சா கூறும்போது, நம் நாட்டில் இருக்கும் தீராத நோய்களில் ஒன்று காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்.
இப்போதைய தேவை
அந்த நோய் பற்றிய தவறான கருத்துகளை மாற்றுவது இப்போதைய தேவையாக இருக்கிறது. அதை இந்த தொடர், அழுத்தமாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சொல்லும். தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவரும் இந்தக் காசநோய், கொரோனா தொற்று பரவல் காரணமாக மோசமடைந்திருக்கிறது' என்றார். இந்த தொடர் 5 எபிசோடுகளாக உருவாகி இருக்கிறது. இந்த மாத இறுதியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.