Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
6 மாதத்தில் 7 படங்களை இழந்த சுஷாந்த் சிங்.. ஒரு நடிகரை கொன்று விட்டார்கள்.. சஞ்சய் நிருபம் ஆவேசம்!
சென்னை: சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு திரைத்துறையின் இரக்கமற்ற தன்மையே என காரணம் முன்னாள் எம்பியான சஞ்சய் நிருபம் விளாசியிருக்கிறார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பீகாரை பூர்விகமாக கொண்ட சுஷாந்த் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு மருத்துவர். அண்ணன் ஒரு எம்எல்ஏ.
சுஷாந்தை கொன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.. ஆலியா பட் கரண் ஜோகரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!
தோனியின் பயோபிக்
தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார் சுஷாந்த் சிங். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுக்க பிரபலமாகி பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
தற்கொலைக்கு எதிராக
கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ச்ஹிஹோரே என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். தற்போது அவர் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஓரங்கட்டிய பாலிவுட்
திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சுஷாந்த் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பாலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகளை கொடுக்கமால் ஓரங்கட்டியதால்தான் அவரது மன அழுத்தம் அதிகரித்தது என்றும் கூறி வருகின்றனர்.
புறக்கணிக்க வேண்டும்
மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான கரன் ஜோஹர், சல்மான் கான், ஆலியாபட் ஆகியோர் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்றும் அவர்கள்தான் சுஷாந்தை பாலிவுட்டில் பிளாக் செய்தார்கள் என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாலிவுட்டில் சில நட்சத்திரங்களின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இரக்கமற்ற தன்மை
இந்நிலையில் முன்னாள் எம்பியும் பிரபல அரசியல் வாதியுமான சஞ்சய் நிருபம், சுஷாந்த் மரண விவகாரத்தில் பாலிவுட் திரைத்துறையை கடுமையாக சாடியுள்ளார். ச்ஹிஹோரே படத்திற்கு பிறகு 6 மாதங்களில் 7 படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் சுஷாந்த் என்றும், திரைத்துறையின் இரக்கமற்ற தன்மை ஒரு நடிகரை கொன்றிருக்கிறது என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.