Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சரணடைய மேலும் அவகாசம் வேண்டும் - உச்சநீதி மன்றத்தில் சஞ்சய் தத் மனு
கடந்த 1993-ம் ஆண்டு 251 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஏற்கனவே அவர் சிறையில் 18 மாதங்களை கழித்து விட்ட நிலையில், மீதமுள்ள தண்டனைக் காலமான 3 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும். இதற்காக தடா நீதிமன்றத்தில் அவர் சரண் அடையவும் உத்தரவிட்டது. ஆனால், சஞ்சய் தத்துக்கு கருணை காட்ட வேண்டும் என 60-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சஞ்சய் தத், நீதிமன்ற தீர்ப்பை மதித்து சிறை செல்வேன் என்றும், மேல்முறையீடு செய்யமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளில் உருவாகி வரும் பல்வேறு திரைப்பட சூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால், தனக்கு சிறை செல்வதற்கு கால அவகாசம் தேவை என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கவிருக்கிறது.