Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சரணடைய மேலும் அவகாசம் வேண்டும் - உச்சநீதி மன்றத்தில் சஞ்சய் தத் மனு
கடந்த 1993-ம் ஆண்டு 251 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஏற்கனவே அவர் சிறையில் 18 மாதங்களை கழித்து விட்ட நிலையில், மீதமுள்ள தண்டனைக் காலமான 3 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும். இதற்காக தடா நீதிமன்றத்தில் அவர் சரண் அடையவும் உத்தரவிட்டது. ஆனால், சஞ்சய் தத்துக்கு கருணை காட்ட வேண்டும் என 60-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சஞ்சய் தத், நீதிமன்ற தீர்ப்பை மதித்து சிறை செல்வேன் என்றும், மேல்முறையீடு செய்யமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளில் உருவாகி வரும் பல்வேறு திரைப்பட சூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால், தனக்கு சிறை செல்வதற்கு கால அவகாசம் தேவை என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கவிருக்கிறது.