Don't Miss!
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நிர்பயாவுக்கு நடந்த கொடூரத்தை கேள்விப்பட்டு 10 நாட்களாக தூங்காத நடிகர்
மும்பை: நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கேள்விப்பட்டு 10 நாட்களாக தூங்கவில்லை என்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தையும் அதிர வைத்துள்ளது. அந்த கொடூரமான சம்பவத்தை யாராலும் மறந்துவிட முடியாது.
இந்நிலையில் இது குறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது,
நிர்பயா
நிர்பயா வழக்கு குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதை நினைத்து 10 நாட்களாக நான் தூங்கவே இல்லை. அந்த அளவுக்கு அந்த சம்பவம் என்னை பாதித்தது என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
மகள்கள்
மாற்றம் ஏற்பட வேண்டும். என் முழு ஆதரவு பெண்களுக்கு உண்டு. ஏன் என்றால் எனக்கும் இரண்டு மகள்கள் மற்றும் சகோதரிகள் உள்ளனர் என்கிறார் சஞ்சய் தத்.
மரியாதை
மக்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.
நீதி
விரைவில் நீதி கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற வழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்ததாக தெரியவில்லை. மைனர் என்று ஒரு குற்றவாளியை விட்டுவிட்டனர் என்கிறார் சஞ்சய் தத்.