Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முன்னாள் காதலியிடம் தன் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்த நடிகர்
Recommended Video
மும்பை:தன் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து மாதுரியை சந்திக்க வைத்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும், நடிகை மாதுரி தீக்ஷித்தும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் 22 ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள படம் கலன்க்.
வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்டோரும் நடித்துள்ள கலன்க் வரும் 17ம் தேதி ரிலீஸாகிறது.
அஜ்மீர் தர்காவுக்கு சென்ற விக்னேஷ் சிவன்: எதற்காக சென்றார்?
எதிர்பார்ப்பு
பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட முன்னாள் காதல் ஜோடியான சஞ்சய் தத், மாதுரி மீண்டும் சேர்ந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் மாதுரி குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் சஞ்சய் தத்.
சஞ்சய் தத்
22 ஆண்டுகள் கழித்து மாதுரியுடன் மீண்டும் நடிக்க முதலில் பதற்றமாக இருந்தது. அவருடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி. எங்கள் குழந்தைகள் பற்றி நிறைய பேசினோம். நான் என் பிள்ளைகளை செட்டுக்கு வரவழைத்து மாதுரியை சந்திக்க வைத்தேன் என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
மாதுரி
மாதுரி சஞ்சய் தத்தை சார் என்று தற்போது அழைக்கிறார். ஏன் என்று கேட்டால் சும்மா என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னாள் காதல் ஜோடி சேர்ந்து நடிப்பது சாதாரண விஷயமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்
நான் நிஜத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்பதால் படங்களில் யாருடைய மனைவி அல்லது தாயாக மட்டுமே நடிக்க விரும்பவில்லை. நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மாதுரி தெரிவித்துள்ளார்.