Don't Miss!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முன்னாள் காதலியிடம் தன் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்த நடிகர்
Recommended Video
மும்பை:தன் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து மாதுரியை சந்திக்க வைத்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும், நடிகை மாதுரி தீக்ஷித்தும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் 22 ஆண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள படம் கலன்க்.
வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்டோரும் நடித்துள்ள கலன்க் வரும் 17ம் தேதி ரிலீஸாகிறது.
அஜ்மீர் தர்காவுக்கு சென்ற விக்னேஷ் சிவன்: எதற்காக சென்றார்?
எதிர்பார்ப்பு
பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட முன்னாள் காதல் ஜோடியான சஞ்சய் தத், மாதுரி மீண்டும் சேர்ந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் மாதுரி குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் சஞ்சய் தத்.
சஞ்சய் தத்
22 ஆண்டுகள் கழித்து மாதுரியுடன் மீண்டும் நடிக்க முதலில் பதற்றமாக இருந்தது. அவருடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி. எங்கள் குழந்தைகள் பற்றி நிறைய பேசினோம். நான் என் பிள்ளைகளை செட்டுக்கு வரவழைத்து மாதுரியை சந்திக்க வைத்தேன் என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
மாதுரி
மாதுரி சஞ்சய் தத்தை சார் என்று தற்போது அழைக்கிறார். ஏன் என்று கேட்டால் சும்மா என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னாள் காதல் ஜோடி சேர்ந்து நடிப்பது சாதாரண விஷயமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்
நான் நிஜத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்பதால் படங்களில் யாருடைய மனைவி அல்லது தாயாக மட்டுமே நடிக்க விரும்பவில்லை. நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மாதுரி தெரிவித்துள்ளார்.