அண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு வந்தது இல்லை: ஸ்ரீதேவியின் கொழுந்தனார் பேட்டி #Sridevi
Recommended Video

மும்பை: என் அண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்று ஸ்ரீதேவியின் கணவரின் தம்பி சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
நாத்தனாரின் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார்.

துபாயில் அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது குறித்து போனி கபூரின் தம்பி சஞ்சய் கபூர் கூறியிருப்பதாவது,
அண்ணியின் மரணத்தால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம். அவருக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்றார்.

ஆரோக்கியமாக இருந்த ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை பலராலும் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது.
ஸ்ரீதேவியின் மரணத்தால் இந்த நாள் திரையுலகினருக்கு கருப்பு நாளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











