Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு வந்தது இல்லை: ஸ்ரீதேவியின் கொழுந்தனார் பேட்டி #Sridevi
Recommended Video
மும்பை: என் அண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்று ஸ்ரீதேவியின் கணவரின் தம்பி சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
நாத்தனாரின் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார்.
துபாயில் அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது குறித்து போனி கபூரின் தம்பி சஞ்சய் கபூர் கூறியிருப்பதாவது,
அண்ணியின் மரணத்தால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம். அவருக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்றார்.
ஆரோக்கியமாக இருந்த ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை பலராலும் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது.
ஸ்ரீதேவியின் மரணத்தால் இந்த நாள் திரையுலகினருக்கு கருப்பு நாளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.