Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'சகோதரியை விட சிறந்த தோழி..' 3 மாதத்துக்குப் பிறகு சோசியல் மீடியாவில்.. ஜாமீனில் வந்த ஹீரோயின்!
பெங்களூரு: ஜாமீனில் வந்திருக்கும் பிரபல நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமூக வலைதளப் பக்கத்துக்கு வந்திருக்கிறார்.
Recommended Video
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைப்பு
இந்த வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி, செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம்
நடிகை ராகிணி, சஞ்சனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் சில முறை நிராகரிக்கப்பட்டன. இதனால் ராகிணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சஞ்சனாவுக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்ட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை
அதை ஏற்ற நீதிமன்றம், சஞ்சனா கல்ராணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மாதம் ஒரு நாள் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் 3 மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
வீட்டில் ஓய்வு
வீட்டில் ஓய்வெடுத்து வரும் சஞ்சனா, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதாகவும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மீடியாவிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சகோதரியை விட
கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா பக்கம் வராத அவர், இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்ஸ்டாவுக்கு வந்திருக்கிறார். ரசிகர் ஒருவர் அனுப்பிய போஸ்ட்டை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் ஷேர் செய்துள்ளார். அதில், அவர் சகோதரி நிக்கி கல்ராணியுடன் இருக்கிறார். சகோதரியை விட சிறந்த தோழி யாரும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!