மெட்ராஸ் டு கோவா... புல்லட்டில் போய்வந்த இயக்குநர் சாந்தகுமார்!!

2,600 கிலோ மீட்டர் தூர பயணத்தை 26மணி நேர பயணம் செய்து கடந்துள்ளார் சாந்தகுமார். இடையில் இரண்டு இரவு ஓய்வு எடுத்துள்ளார்.
சாந்தகுமாரின் படம் மட்டுமல்ல, பள்ளிப் பருவமும் வித்தியாசமானதுதான். நல்ல பள்ளி, நல்ல ஆசிரியர்களிடம்தான் படிக்க வேண்டும் என்பது அவரது பெற்றோரின் ஆசையாம். அதனால் கிராமம் தொடங்கி சென்னை வரை ஆறு பள்ளிகளுக்கு மாறினாராம்.
அடுத்த படத்தைத் தொடங்க ஏன் இத்தனை தாமதம் என்றால், "நல்ல கதைக்காக நேரம் எடுத்துக் கொள்கிறேன். நான் கதை எழுத எடுத்து கொள்ளும் நேரம் அதிகமே தவிர படப்பிடிப்பை திட்டமிட்ட குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











