Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
“சர்வர் சுந்தரம்” மற்றும் “டகால்டி” ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Recommended Video
சென்னை : சந்தானம் நடிப்பில் "டகால்டி" மற்றும் "சர்வர் சுந்தரம்" ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி இரு தயாரிப்பாளர்கள் இடையேயும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து "டகால்டி" மற்றும் "சர்வர் சுந்தரம்" ஆகிய இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதி ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன் "சர்வர் சுந்தரம்" படத்தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் "டகால்டி" படத்தயாரிப்பாளர் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது...
வரும் 31 ந்தேதி சர்வர் சுந்தரம், டகால்டி படங்கள் வருவதாக விளம்பரங்கள் வெளிவந்தன. இரு படங்களும் ஒரே நாளில் வருவதால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவுரையை ஏற்று இப்போது டகால்டி மட்டும் 31ந்தேதி வருகிறது. சர்வர் சுந்தரம் பிப்ரவரி 14 ல் வருவதாக ஒப்புக்கொண்டனர். யாருடைய படத்தையும் இந்த தேதியில் வாருங்கள் என சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் சினிமாவின் நலம் கருதி எங்களுக்குள் பேசி இந்த முடிவுக்கு வந்தோம். இந்த முடிவுக்கு ஒத்துழைத்த இரு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.
"சர்வர் சுந்தரம்" படத்தயாரிப்பாளர் செல்வகுமார் பேசியது ....
இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி இப்போது இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய முற்பட்டோம். சந்தானம் அவர்களின் மற்றொரு படமான "டகால்டி" படமும் அதே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருவருக்கும் நலம் பயக்கும் வகையில் எங்கள் படம் பிப்ரவரி 14 படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டோம். இது சினிமாவுக்கும் நல்லது, எங்கள் இருவருக்கும் நல்லது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. படம் வெளியிடுவது சாதாரண வேலையில்லை. எங்கள் படத்தை கண்டிப்பாக பிப்ரவரி 14 திரைக்கு கொண்டு வருவோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
"டகால்டி" படத்தயாரிப்பாளர் சௌத்ரி அவர்கள் பேசியது...
இங்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. எனக்கு இப்படம் தலைப்பிரசவம் போன்றது. எல்லோருக்கும் முதல் படம் என்பது ஒரு குழந்தை பிறப்பது போன்றது தான். சர்வர் சுந்தரம் தயாரிப்பாளர் எங்களுக்காக விட்டுக்கொடுத்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி. இதில் ஒத்துழைத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி
இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இரு தயாரிப்பாளர்களும் சால்வை மாற்றி தங்களின் அன்பை வெளிபடுத்தி கொண்டனர் .இது தொடர்பாக பேசிய பலரும் கூறிய ஒரே விஷயம் விட்டு கொடுத்தவன் கெட்டு போவதில்லை என்பது தான்
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதிராஜா பேசியது...
இது ஒரு ஆச்சர்யமான மேடை. இந்தப்பிரச்சனையில் ஒரு பெரும் கத்திச்சண்டை நடந்து கொண்டிருந்தது. என்னதான் பிரச்சனை எனக் கேட்கலாம் என்று போனால் இருவருமே கத்தியை கீழே போட்டு விட்டார்கள். இருவர் பக்கமும் நியாயம் இருக்கிறது. இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ளார்கள். இக்காலத்தில் படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது அதை விட கஷ்டமானது. இந்தப் பிரச்சனையில் எங்கள் தீர்ப்பை விட அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மனது பெருந்தன்மையானது. இருவரும் தங்கமான மனிதர்கள். சர்வர் சுந்தரம் படத்தின் மீது எனக்கு கொஞ்சம் அன்பு அதிகம். அந்த தலைப்பின் மீதிலிருந்தே எனக்கு பல மலரும் நினைவுகள் உண்டு. நாகேஷ் நடித்த அந்தப்படம் முதலில் வந்தபோது நான் உதவி இயக்குநர் கூட இல்லை. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் விட்டுக்கொடுத்துள்ளார். தங்கமான மனிதர் அவர். இருவரும் ஒரே நேரத்தில் வந்தால் அவர்களுக்கும் நஷ்டம் சினிமாவுக்கும் நஷ்டம். இருவரும் சுமூகமாக ஒத்துக்கொண்டு இப்போது படத்தை வேறு வேறு தேதிகளில் ரிலீஸ் செய்கிறார்கள். இருவருக்கும் எனது நன்றிகள். இரு படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்றார் .
இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாரதிராஜா தன் வாழ்வில் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படம் பார்க்கும் போது நடந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் .அதில் நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் முன்பு 2ரூபாய் சம்பளத்துக்கெள்ளாம் வேலை பார்த்து இருக்கிறேன் அப்போது எனக்கு நடிகர் நாகேஷ் என்றால் அவ்வளவு பிடிக்கும் அவரின் சர்வர் சுந்தரம் படத்தின் ஸ்பெஷல் ஷோ பாக்க என்னை மரியாதை கூறிய ஒருவர் அழைத்து சென்றார் .
அங்கு ஏ.வி.எம் இல் இருந்தவர்கள் என்னை யார் என்று கேட்டனர் நான் இவருடன் வந்ததாக கை காட்டினேன் அவர் என்னை யார் என்று தெரியாது என கூற அங்கிருந்தவர்கள் என்னை வெளியேற்றி விட்டனர் என வருத்ததுடன் கூறினார் .
அந்த இடத்தில் இருந்து வெளியே வந்து பாரதிராஜா அந்த இடத்தையே சற்று நேரம் பார்த்த படி இருந்தேன் என்றார்.அப்போது கட்டாயம் சினிமாவில் நடிகனாவேன் அல்லது இயக்குனராவேன் என சபதம் எடுத்து சென்றேன் என கூறினார்,அதன்படி சாதித்து நம் முன்னே மாபெரும் இயக்குனராய் நிற்கிறார்.ஏ.வி.எம் வின் வரலாறு மிக பெரியது அதற்கு பல கதைகள் இருக்கின்றன சமீபத்தில் ரஜினி கூட தனது பட விழாவில் ஏ.வி.எம்மில் தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்து இருந்தார்.அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!