Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'லட்டு' என்னுடையது.. இன்னும் அதையே சொல்லும் சந்தானம்!!!
இந்தப் படம் பாக்யராஜின் இன்று போய் நாளை வா கதைதான் என்று ஆரம்பத்தில் சந்தானமும் ராம நாராயணனும் கூறிவந்தனர். அந்த நேரத்தில் பாக்யராஜும் என் அனுமதியின்றி என் கதையைத் திருடி படமெடுத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டி போலீஸிலும் புகார் செய்திருந்தார்.
இந்தப் பிரச்சினையில் பாக்யராஜ் தனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என்று புலம்பி வரும் நிலையில், லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை என்னுடையது, எனக்கே சொந்தமானது என்று சந்தானம் திடீர் ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார்.
'படத்தின் வசூல் விவரம் முழுவதையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி வழக்கு தொடர்ந்துள்ளேன். மொத்த வசூலையும் பார்த்த பிறகு எனக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பது பற்றி கேட்பேன்' என்று பாக்யராஜ் சொன்னதுமே, உஷாரான சந்தானம் மனமறிய இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்.
'மூன்று பேரை வைத்து ஒரு கதை என் சிந்தனையில் ஓடியது. அதைதான் கண்ண லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் படமாக எடுத்துள்ளோம்,' என்று சந்தானம் கூறியுள்ளதைக் கேட்டு கொதித்துப் போன பாக்யராஜ், இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்று மக்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன், என்றார்.