Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஹீரோவாயிட்டேன், இனி 'அப்படி' பேச மாட்டேன்- சந்தானம்
சென்னை: ஹீரோவாகிவிட்டதால் இனி இரட்டை அர்த்த வசனங்களை பேசப்போவது இல்லை என்று சந்தானம் முடிவு செய்துள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் சந்தானம் தான். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என்று அவர் வாங்கும் சம்பளத்தை பார்த்து சில ஹீரோக்களே வயித்தெரிச்சல் படும் அளவுக்கு மனிதர் உள்ளார்.
இந்நிலையில் அவர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.எஸ். ராஜமவுலியின் தெலுங்கு ஹிட் படமான மரியாத ராமண்ணாவின் ரீமேக் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
தயாரிப்பாளர்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை பிரசாத் வி. பொட்லூரியுடன் சேர்ந்து சந்தானமும் தயாரிக்கிறார். அவர் முன்னதாக தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை அர்த்த வசனம்
சந்தானம் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி மக்களை சிரிக்க வைப்பவர். மேலும் இதற்காகத் தான் அவர் அடிக்கடி கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறார்.
அம்மா
சந்தானத்திற்கு அம்மா என்றால் உயிர். அவரிடம் இனிமேல் இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
ஹீரோ
ஹீரோவாகிவிட்ட அவர் இனிமேல் இரட்டை அர்த்த வசனங்களை பேச மாட்டேன் என்று முடிவு செய்துள்ளாராம். அது சரி ஹீரோவாகிவிட்டு அப்படி பேசினால் நல்லாவா இருக்கும்.