Just In
- 1 hr ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 4 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 11 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 16 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- News
இந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்!
- Sports
கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆர்யாவை ஹீரோவாக வைத்து புதிய படம்.... இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!

சென்னை: ஆர்யாவை ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போவதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக திகழ்ந்தவர் நடிகர் சந்தானம். ஒரு கட்டத்தில் அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என முடிவு செய்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு ஆகிய படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்ற நிலையில், அவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சக்கப்போடு போடு ராஜா படம் சரியாக ஓடவில்லை. இதையடுத்து அவர் துல்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சந்தானம், ஆர்யாவை வைத்து படம் இயக்கப் போவதாகக் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "காமெடியனாக இருந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டேன். மீண்டும் காமெடியனாக நடிக்கும் எண்ணம் இல்லை.
ஒருவேளை ஹீரோவாக நடிப்பது ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால், படம் இயக்க தொடங்கிவிடுவேன். அதுவும் ஆர்யாவை வைத்து தான் படம் இயக்குவேன். அது காமெடி படமா இல்லை வேறுவகை படமா என்பதை இப்போது சொல்ல முடியாது.
தில்லுக்கு துட்டு 2 படம் முதல் பாகத்தை போலவே செம காமெடியாக இருக்கும். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்கும்" என அவர் கூறினார்.