Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வில்லன் பெயரில் வரும் படத்தில் ஹீரோவுக்காக பின்னணி பாடிய காமெடியன்!
நம்பியார் எனும் பெயரில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோ ஸ்ரீகாந்துக்காக பின்னணி பாடினார் காமெடியன் சந்தானம்.
ஒரு முழுப்பாடலுக்கும் சந்தானம் குரல் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை.
விஜய் அண்டனி இசையமைத்துள்ள இந்தப் பாடலை விவேகா எழுதிருக்கிறார்.
சந்தானம் இன்னொரு ஹீரோ
சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா கூறுகையில், "இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார். ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள். காமடிக்கு பஞ்சமில்லாத கதைக் களம். அதற்காக வெறும் காமடியை மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல. சந்தானம் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும்.
விஜய் ஆன்டனி யோசனை
படத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் வரும் பாடலை யாரை வைத்துப் பாட வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, விஜய் அண்டனி, 'சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும்' என்றார். சந்தானம் மறுத்து விடுவார் என்றுதான் நினைத்தோம். ஆனால் சந்தோஷமாக பாட வந்துவிட்டார். ஐந்து மணி நேரம் எடுக்கும் என்று நினைத்த பாடலை பதினைந்து நிமிடங்களில் முடித்துக் கொடுத்துவிட்டார்.
சரக்கடி நண்பா நீ சரக்கடி
'ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி' என்று ஆரம்பிக்கும் வரிகள். மனதுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் ஒரு போர் என்று சொல்லலாம் அந்த காட்சியை. அதுவரை தன் நண்பர்கள் தண்ணியடித்தால் கோக்கை வாங்கி வைத்துக்கொண்டு கம்பனி கொடுக்கும் ஸ்ரீகாந்த் முதல்முறையாக தண்ணியடிக்கும் சங்கடமான சூழ்நிலை.
இந்த காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு செமையா பொருந்தி வந்திருக்கு என்றார் இயக்குனர் கணேஷா.
மரியாதைக்குரிய நண்பர்
ஸ்ரீகாந்த் கூறும்போது, 'சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக் கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார். நீங்க ஜெயிக்கணும் என்ற அவரோட நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். சந்தானத்துக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்', என்றார்.