Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சீனியர்கள் ரீஎன்ட்ரி, சர்ச்சை எதிரொலி: சந்தானம் எடுத்த 'அதிரடி' முடிவு
சென்னை: சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் சந்தானம் தனது படங்களில் இனி ஆபாசமாக வசனங்கள் பேசப் போவதில்லையாம்.
தற்போதைக்கு கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்தானம் தான். படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களின் விமர்சனங்களை பார்த்தோம் என்றால், படம் சந்தானத்திற்காக தான் ஓடியது என்று எழுதியிருப்பார்கள். அந்த அளவுக்கு படத்தை தூக்கி நிறுத்துபவராக உள்ளார்.
அதே சமயம் அவரது வசனங்கள் இரட்டை அர்த்தம் உடையவையாகவே இருக்கும். மேலும் யாரையாவது நக்கலடிக்கும் வகையிலும் இருக்கும். இத்தகைய வசனங்களுக்காக சர்ச்சையில் சிக்கினார் சந்தானம்.
ரசனை... சர்ச்சை
சந்தானத்தின் இரட்டை அர்த்த வசனங்கள், நக்கல்ஸுகளை இத்தனை நாட்களாக மக்கள் ரசித்தனர். தற்போது அதே மக்கள் அவரது வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆல் இன் ஆல் அழகு ராஜா
ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் அவர் பேசிய ஒரு வசனம் பெண்கள் அமைப்புகளை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து அந்த வசனம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
கவுண்டமணி, வடிவேலு
சீனியர்களான கவுண்டமணி மற்றும் வடிவேலு ஆகியோர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளனர். இதனால் சந்தானம் கலக்கம் அடைந்துள்ளாராம்.
ஆபாசம்
சீனியர்கள் மறுபிரவேசம் செய்யும் நேரத்தில் சர்ச்சையில் வேறு சிக்கிவிட்டோம். இப்படி போனால் மார்க்கெட் படுத்துவிடும் என்று நினைத்த சந்தானம் இனி தனது படங்களில் ஆபாச வசனங்கள் பேசப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளாராம்.