Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘வணக்கம் சென்னை’ .. சந்தானமே ஆரம்பிச்சு வப்பாராம்.. அவரே முடித்தும் வைப்பாராம்...!
சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'வணக்கம் சென்னை'. இப்படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் தயாரிக்கிறது.
மிர்ச்சி சிவா ஹீரோவாகவும், பிரியா அனந்த் நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் சந்தானம் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடியை பின்னணியாக கொண்டு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். காமெடியைக் கதைகளமாகக் கொண்டிருக்கும் இப்படத்தில் சந்தானத்திர்கு நல்ல வெயிட்டான ரோலாம்.
இதைப் பற்றி கிருத்திகா உதயநிதி கூறும்போது....
வாழவைக்கும் சென்னை...
வாய்ப்புகளின் தேசமான சென்னை, தன்னை நம்பி வருபவர்களை ஒரு போது கை விடுவதில்லை. இது தான் கதையின் அடைப்படை.
காமெடி பொழுதுபோக்குப் படம்...
தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வர்ற ஹீரோ சிவாவுக்கும், லண்டன்ல இருந்து சென்னைக்கு வர்ற ப்ரியா ஆனந்துக்கும் இடையே உருவாகும் மோதல், காதல், காமெடி தான் இந்த வணக்கம் சென்னை.
ஆரம்பமும், முடிவும்...
படத்தின் கதையை ஆரம்பித்து வைப்பதும், முடித்து வைப்பதும் சந்தானம் தான்' எனத் தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி
அடுத்து உதய் ஹீரோ...
மேலும், இப்படம் தன்னை நிச்சயம் ஜெயிக்க வைக்கும் எனவும், தனது ரெண்டாவது படத்தில் உதயநிதி தான் ஹீரோ என நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் பேசுகிறார் கிருத்திகா உதயநிதி.
அனிருத், ஆண்ட்ரியா...
இப்படத்தில் உள்ள மொத்தப்பாடல்கள் 7. அதில் 5 பாடல்களை அனிருத் பாடி இருக்கிறாராம். காதல் வதந்திகளுக்குப் பிறகு, அனிருத், ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து ‘எங்கடி பொறந்த...' பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.