Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பேரறிவாளனாக சாந்தனு… அற்புதம் அம்மாளாக பூர்ணிமா பாக்கியராஜ்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கதை தமிழ் சினிமாவாகிறது. இந்த படத்தில் ப வரிசை இயக்குநர்களான பாரதிராஜா, பாக்கியராஜ், பாண்டியராஜ் ஆகியோரின் வாரிசுகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படத்தில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்கியராஜ் நடிக்க உள்ளாராம்.
ராஜீவ் கொலை வழக்கு
முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை பெற்று அதிலிருந்து மீண்டவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன்.
பல ஆண்டு சிறைவாசம்
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசும் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அரசியல் சாசன அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
திரைப்படமாகும் மூவர் கதை
தற்போது பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் வாழ்க்கை கதையையும், அற்புதம் அம்மாளின் போராட்டத்தையும் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்கள். படத்திற்கு வாய்மை என்று பெயரிட்டிருக்கின்றனர்.
இயக்குநர்களின் வாரிசுகள்
இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் முருகன் வேடத்திலும், சாந்தன் வேடத்தில் பாண்டியராஜ் மகன் பிரித்வி, பேரறிவாளன் வேடத்தில் பாக்கியராஜ் மகன் சாந்தனு நடிக்கின்றனர்.
பூர்ணிமா பாக்கியராஜ்
அற்புதம் அம்மாள் வேடத்தில் பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் நடிக்க உள்ளதார். இந்தப் படத்தின் கதைக்கு பேரறிவாளனும், அற்புதம் அம்மாளும் சம்மதம் தெரிவித்து விட்டனராம்.
அரசியல் கிடையாது
வாய்மை திரைப்படம் மரணதண்டனைக்கு எதிரான திரைப்படம்தான். அரசியல் கலப்பற்ற படம் என்றும் கூறியுள்ளார் இயக்குநர் செந்தில் குமார்.படத்தின் ஆடியோவை அற்புதம் அம்மாள்தான் வெளியிடப்போவதாக கூறியுள்ளார் இயக்குநர்.
மரண தண்டனைக்கு எதிராக
இந்தப் படத்தில் ராஜீவ் கொலைபற்றி பேசப் போவதில்லையாம், மரணதண்டனைக்கு எதிரான ஒரு தாயின் போராட்டத்தைப் பதிவு செய்துள்ளார்களாம். பாக்கியராஜ் முழு ஆதரவு கொடுத்துள்ளாராம்.
கவுண்டமணி ஆர்வம்
வாய்மை திரைப்படத்தில் கவுண்டமணி மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுப்பராக வருகிறார். இதில் அவருடைய பெயர் டாக்டர். பென்னிகுவிக்.
போராட்டம் வலுவடையும்
இந்தப் படம் வெளியானபின்னர் மரணதண்டனைக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுவடையும் என்கிறார் இயக்குநர் செந்தில்குமார்.