கல்யாண நாள் சுதந்திர தினம் ரெண்டுமே எனக்கு ஒன்னுதான்..! சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை: சுதந்திர தினம், திருமண நாள் எல்லாமே எனக்கு ஒன்னுதான் என்கிறார் சந்தோஷ் நாராயணன்.
இயக்குனர் ரஞ்சித்தின் முதல்படமான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன்.

சூது கவ்வும், மெட்ராஸ், குக்கூ, கககபோ, இறைவி, கபாலி, காலா என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இப்போது சர்வர் சுந்தரம் மற்றும் வடசென்னை திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ட்விட்டரில் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். சுதந்திர தின நாள் மிகவும் சந்தோஷமான நாள் என பதிவிட்டு என்னுடைய திருமணம் ஆகஸ்ட் 15ல் தான் நடந்தது. நான் இசைமைப்பாளராக பணியாற்றிய முதல் திரைப்படமும் இந்த நாளில்தான் ரிலீஸ் ஆனது என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
அதனால்தான் இந்த நாளில் அளவிடமுடியாத மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் ட்வீட் செய்துள்ளார். அவர் இசையமைத்த முதல் திரைப்படமான அட்டகத்தி 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











