Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழக நட்சத்திரங்களின் அம்மா சரண்யா பொன்வண்ணன்
கோலிவுட் பட உலகில் அழகான அம்மாவாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன்தான் அதிகம் சம்பளம் வாங்கும் அம்மா நடிகையாம்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகாலமாக அம்மா நடிகையாக வலம் வந்தவர் ஆச்சி மனோரமா தான். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற அவர், பின்னர் பாட்டி நடிகை ஆனார்.
அம்மா நடிகையான எஸ்.என்.லட்சுமி பின்னர் பாட்டியாக பதவி உயர்வு பெற்று பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு அவர் காலமானார்.
கோலிவுட் பட உலகில் அம்மா நடிகைகள் பலர் இருந்தாலும் சரியான அம்மா நடிகைகள் அமையவில்லை. இந்த நிலையில், தமிழ் சினிமா உலகில் பெயர் சொல்லும் படியான அம்மா நடிகை இல்லாமல் இருந்த நேரம் சரண்யா களமிறங்கினார்.
1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர், மனசுக்குள் மத்தாப்பு, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.