Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி
Recommended Video

சென்னை: இந்த மூஞ்சிய எல்லாம் யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி தன்னிடம் கேட்டதாக சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட சரண்யா விஜய் சேதுபதி பற்றி ஒரு விஷயம் சொன்னார். அவர் விழாவில் கூறியதாவது,

முகம்
நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து சேதுவுடன் நடிக்கிறேன். தென்மேற்கு பருவக்காற்று தான் நாங்கள் ஒன்றாக நடித்த முதல் படம். அப்போ சேது என்னிடம் வந்து என் முகமெல்லாம் யாருக்காவது பிடிக்குமாம்மா என்று கேட்டது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

க்யூட்
முகம் பிடிக்குமா என்று ஏன் கேட்கிறீர்கள்? எவ்வளவு லட்சணமா, க்யூட்டா, குழந்தை மாதிரி இருக்கிறது உங்கள் முகம் என்று நான் சொன்னேன். அப்படி எல்லாம் கேட்காதீங்க என்றேன்.

வெற்றி
உங்களை மாதிரி இருக்கும் நிறைய பேர் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்றேன். பார்க்கலாம்மா என்று பயந்து, யோசித்துக் கொண்டிருந்த ஆளுகிட்ட இப்ப நான் சம்பளம் வாங்கி நடித்திருக்கிறேன்.

சம்பளம்
யாருக்காவது பிடிக்குமா என்று கேட்ட சேது தற்போது தயாரிப்பாளராகி அவரிடம் சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். இதை விட பெரிய சந்தோஷம் வேறு எதுவுமே இல்லை. ஒரு குழந்தையின் வளர்ச்சியை பார்ப்பது போன்று சந்தோஷமாக உள்ளது. தன்னம்பிக்கை, விடா முயற்சி, நல்ல குணத்தால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்றார் சரண்யா.