Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எடிட்டர் கிஷோர் உடல் நிலை குறித்த தட்ஸ்தமிழ் செய்தி... சரத்குமாரின் ட்விட்டர் பதில்!
சென்னை: தேசிய விருது பெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலைமையைப் பாருங்கள் என்ற தலைப்பில் தட்ஸ்தமிழ் (ஒன்இந்தியா தமிழ்) வெளியிட்ட செய்திக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
எடிட்டர் கிஷோர் கடந்த இரு தினங்களாக கோமா நிலையில் விஜயா மருத்துவமனையில் கிடக்கிறார். வெள்ளிக்கிழமையன்று மயங்கி விழுந்த அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அவர் யார் என்று அடையாளம் தெரியாததால் முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர் அவரது உறவினர்கள்.
இந்த நிலையில் அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, தலை முழுக்கப் பரவி விட்டதால் அவரைக் காப்பாற்றுவது கஷ்டம் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்களாம்,
@91_Vjay @thatsTamil @dhanushkraja We are in touch the top doctor concerned is attending on him, spoken to kishore's brother and vetrimaran
— R Sarath Kumar (@realsarathkumar) March 3, 2015
தேசிய விருது பெற்ற ஒரு முன்னணி திரைப்படக் கலைஞரை கவனிக்கக் கூட ஆளில்லை என்று நமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இந்த செய்தியின் சுட்டி ட்விட்டரில் பகிரப்பட்டிருந்தது. இதனை சிலர் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு பகிர்ந்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், "கிஷோரின் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிச்ச உயர் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளோம். கிஷோரின் சகோதரர் மற்றும் இயக்குநர் வெற்றி மாறனிடமும் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.