Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சரத்குமார் நீக்கம் பழிவாங்கும் நடவடிக்கையாமே: சொல்வது ராதிகா இல்லை ரித்தீஷ்
சென்னை: சரத்குமார் மற்றும் ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பழிவாங்கும் நடவடிக்கை என நடிகர் ஜே.கே. ரித்தீஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி பதவிக்கு வர பாடுபட்டவர் நடிகர் ஜே.கே. ரித்தீஷ். இதை சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஷால் அணியினரின் நடவடிக்கைகள் பற்றி ரித்தீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருப்தி இல்லை
புதிய நிர்வாகம் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. தேர்தல் நேரத்தில் சக நடிகர்களை போட்டியாக பார்க்கலாம். ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் அப்படியே பார்க்கிறார்கள். சக கலைஞர்களை நண்பர்களாகத் தான் நினைக்க வேண்டும்.
சரத், ராதாரவி
நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நீக்கப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கையே. நமக்குள் பிரச்சனை என்றால் பேசித் தீர்க்க வேண்டும். அப்படி முடியாவிட்டால் தான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்.
ஊழல் புகார்
எப்பொழுது பார்த்தாலும் ஊழல் புகார் சொல்லிக் கொண்டே இருந்தால் நிர்வாகம் நேர்மையாகவும் இருக்காது, நாகரீகமாகவும் இருக்காது. ஒரு நல்ல நிர்வாகம் வேண்டும் என்று பாடுபட்டால் அவர்கள் என்னவென்றால் இப்படி பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்களே. அவர்கள் இப்படி செய்வார்கள் என எனக்கு அப்போதே தெரியாமல் போய்விட்டது.
நிர்வாகம்
பதவி வரும் போகும். புதிய நிர்வாகத்தினர் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியதில் இருந்து அவர்களின் கூட்டங்களை புறக்கணித்து வருகிறேன்.
ராதிகா
சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது விஷாலின் பழிவாங்கும் நடவடிக்கை தான் நடிகை ராதிகா மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில் ரித்தீஷும் அதையே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!