Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
20ம் தேதி ஊழிப் பெருங்காற்றாய் தியேட்டர்களை மிரள வைக்க வருகிறது ”சண்டமாருதம்”!
சென்னை: சரத்குமார் முதல்முறையாக கதை எழுதி நடித்து தயாரித்திருக்கும் சண்டமாருதம் இந்த மாதம் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
நான்கு வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு இரண்டு வேடங்கள். இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத அதற்கு ராஜேஷ் குமார் திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தினை ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
ஓவியா, மீரா நந்தன் என இரு ஹீரோயின்கள். இவர்களுடன் ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, சிங்கம் புலி, டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்து எடுத்திருக்கும் இந்தப் படத்தை வரும் 20 ஆம் தேதி வெளியிடுகின்றனர். மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தமாம். அப்படி ஒரு திகில் கலந்த நகைச்சுவை படமாக சண்டமாருதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.