ஆதியும் சரத்குமாரும் ஆதி பட நஷ்டம் தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையிடம் நஷ்ட ஈடு கேட்டு திரையரங்க உரிமையாளர்கள்மிரட்டல் தொணியில் அறிக்கை விடுவதற்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமார் கண்டனம்தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வராமல், அடுத்த நாள் ஆதி படம் வெளியானதால், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கு ரூ. 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தநஷ்டத்தை தயாரிப்பாளரான எஸ்.ஏ.சந்திரசேகராதான் அல்லது விஜய் தான் ஈடு கட்ட வேண்டும், இல்லாவிட்டால் இனிவிஜய்யின் படங்களைத் திரையிட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.மேலும், ரஜினிகாந்த் நடிப்பை அப்படியே காப்பி அடித்து, தத்துவம் பேசி, அறிவுரை கூறி வசனம் பேசி நடிக்கும் விஜய்,ரஜினியைப் போல பெருந்தன்மையான மனதுடன் இல்லாமல் இருப்பது ஏன் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.திரையரங்க உரிமையாளர்களின் இந்த அறிக்கைக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில், ஆதி படம் அவுட்ரைட் முறையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, படத்தின் லாப நஷ்டம்,வெற்றி தோல்வி என அனைத்தும் திரைப்படத்தை வாங்கியவர்களையே சாரும். இதுதான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறை.ஆனால் அதை விடுத்து தயாரிப்பாளர் சந்திரசேகராவிடம் நஷ்ட ஈடு கேட்பது முறையல்ல. மேலும் எங்கள் உறுப்பினர் விஜய்ஆதி படத்தின் கதாநாயகனே தவிர தயாரிப்பாளர் இல்லை. இந்தப் பிரச்சினையால் அவரது படங்களைத் திரையிட மாட்டோம்என்று சொல்வது மிகவும் வேதனையானது.எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட சங்கங்களிடம் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும். அதைவிட்டுவிட்டுபத்திரிக்கைகள் மலமாக பேட்டிகள் கொடுத்து எல்லோர் மனதையும் புண்படுத்துவது நேர்மையல்ல.எனவே எங்களது உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் தாங்கள் தந்த பேட்டியை தென்னிந்திய நடிகர் சங்கம்வன்மையாக கண்டிக்கிறது. வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் சரத்குமார்.

By Staff

ஆதி பட நஷ்டம் தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையிடம் நஷ்ட ஈடு கேட்டு திரையரங்க உரிமையாளர்கள்மிரட்டல் தொணியில் அறிக்கை விடுவதற்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமார் கண்டனம்தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வராமல், அடுத்த நாள் ஆதி படம் வெளியானதால், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் தங்களுக்கு ரூ. 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தநஷ்டத்தை தயாரிப்பாளரான எஸ்.ஏ.சந்திரசேகராதான் அல்லது விஜய் தான் ஈடு கட்ட வேண்டும், இல்லாவிட்டால் இனிவிஜய்யின் படங்களைத் திரையிட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

மேலும், ரஜினிகாந்த் நடிப்பை அப்படியே காப்பி அடித்து, தத்துவம் பேசி, அறிவுரை கூறி வசனம் பேசி நடிக்கும் விஜய்,ரஜினியைப் போல பெருந்தன்மையான மனதுடன் இல்லாமல் இருப்பது ஏன் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

திரையரங்க உரிமையாளர்களின் இந்த அறிக்கைக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில், ஆதி படம் அவுட்ரைட் முறையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, படத்தின் லாப நஷ்டம்,வெற்றி தோல்வி என அனைத்தும் திரைப்படத்தை வாங்கியவர்களையே சாரும். இதுதான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறை.

ஆனால் அதை விடுத்து தயாரிப்பாளர் சந்திரசேகராவிடம் நஷ்ட ஈடு கேட்பது முறையல்ல. மேலும் எங்கள் உறுப்பினர் விஜய்ஆதி படத்தின் கதாநாயகனே தவிர தயாரிப்பாளர் இல்லை. இந்தப் பிரச்சினையால் அவரது படங்களைத் திரையிட மாட்டோம்என்று சொல்வது மிகவும் வேதனையானது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட சங்கங்களிடம் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும். அதைவிட்டுவிட்டுபத்திரிக்கைகள் மலமாக பேட்டிகள் கொடுத்து எல்லோர் மனதையும் புண்படுத்துவது நேர்மையல்ல.

எனவே எங்களது உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் தாங்கள் தந்த பேட்டியை தென்னிந்திய நடிகர் சங்கம்வன்மையாக கண்டிக்கிறது. வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X