Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நீ நான் நிழல்'... பேஸ்புக் நட்பால் நடக்கும் தொடர் கொலைகளின் கதை!
இன்றைய வாழ்க்கையில் பேஸ்புக் என்பது மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற சாதனமாகிவிட்டது.
இந்த பேஸ்புக் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது.
இதனை மையமாக வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது. தலைப்பு நீ நான் நிழல்.
பேஸ்புக் அழைப்பு
மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அதாவது ஒருபேஸ்புக்அழைப்புதான்இந்தகொலைகளின்பின்னணியில்இருப்பதைகண்டுபிடிக்கிறார். அடுத்தகொலைவிழும்முன்கொலையாளியைக்கண்டுபிடிக்கமுனைகிறார்.
அதே நேரம், இங்கு இந்தியாவில் ரோஹித் என்ற நபருக்கு, அதே பேஸ்புக் அழைப்பு வருகிறது. அதன்பேரில் மலேசியா கிளம்புகிறான் ரோஹித். போன இடத்தில் என்ன நடக்கிறது என்பது மீதி.
சரத்குமார்
இதுதான் நீ நான் நிழல் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லரின் கதை. இதில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் சரத்குமார், எம்எல்ஏ.
இஷிதா
அவருடன் அர்ஜூன் லால், மனோஜ் கே ஜெயன், இஷிதா, எம்எஸ் பாஸ்கர், தேவன், ப்ளாக் பாண்டி, காதல் அருண், சூப்பர் குட் லட்சுமணன், நிகிதா, ஸ்ருதி, பகத், லட்சுமி ப்ரியா, பாத்திமா பாபு என பெரும் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
ஜான் ராபின்சன்
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜான் ராபின்சன். இவர் 12 ஆண்டுகள் கே எஸ் அதியமான், மேஜர் ரவி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார்.
படத்துக்கு ஆல்பி -நஸீர் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் திருவிடம் பணியாற்றியவர் நஸீர். நிகில் வேணு எடிட்டிங் செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
படத்தின் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : பாதுஷா, கலை இயக்குநர் : அர்கன் எஸ் கர்மா, உடைகள்: சுனிதா பிரசாந்த், மேக்அப்: ஷாஜி, நடனம்: ஷெரிஃப், பிஆர்ஓ: வீ.கே சுந்தர்.
இந்த மாதம் வெளியீடு
பிறைசூடன், கண்மணி ராஜா முகமது பாடல்கள் எழுதியுள்ளனர். படத்தின் வசனங்களை கண்மணி ராஜா முகமதுவே எழுதியுள்ளார். இந்த மாதம் இறுதியில் திரைக்கு வரவிருக்கும் இந்தப்படத்தை ஸ்ரீ முத்தாரம்மன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!