twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், தமிழரைத் தவிற: சரத்குமார் கிண்டல்!

    வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என சரத்குமார் கூறியுள்ளார்

    |

    Recommended Video

    தமிழரைத் தவிற வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் : சரத்குமார் வைரல் வீடியோ

    சென்னை: தமிழர்களையும் வாழவைக்கும் தமிழகம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் அடங்காதே. இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

     Sarathkumar speech at Adangathe function!

    அப்போது பேசிய நடிகர் சரத்குமார், வழக்கம்போல கலகலப்பூட்டினார். ஜி.வி.பிரகாஷும் நானும் காதலித்து நடித்தோம், அதனால் இது ஒரே காதல் மயமான படம் எனக் கூறினார்.

    17 வருடங்களாக திரையுலகில் கஷ்டப்பட்டு வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் ஷண்முகத்தை புகழ்ந்த அவர், இப்படம் வெள்ளி விழாப் படமாக அமையும். ஆனால் இயக்குனர் அவசரப்பட்டு வெள்ளி விழா நிகழ்வில் பேச வேண்டிய விஷயங்களை இப்போதே பேசிவிட்டார் என்றார்.

    கதாநாயகி சுரபி பற்றி பேசும்போது, சுரபி எனப் பெயர் வைத்துள்ளார். அமுத சுரபி போல தமிழ் வரும் கவலைப்படாதீர்கள் எனக் கூறிய அவர். தமிழ்நாட்டுல வந்து இறங்குனீங்கன்னா வந்தாரை வாழவைக்கும் தமிழகம் எல்லாரையும் வாழவைக்கும். தமிழர்களைத் தவிற... எனக் கூறியதும் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. கன நேரத்தில் சுதாரித்த சரத், ஓ சாரி.. தப்பா சொல்லிட்டேனா? தமிழர்களையும் வாழவைக்கின்ற தமிழ்நாடு என்று சொல்லி முடித்தார்.

    சரத்குமாரின் பேச்சு சிரிப்பலையை உண்டாக்கியது. ட்ரெயிலரை பார்க்கும் போது தற்போது தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

    இப்படத்தில் ஜிவி.பிரகாஷ், சுரபி, மந்திரா பேடி, தம்பி ராமையா, மற்றும் பலர் நடித்துள்ளனர். பிகே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    English summary
    Actor Sarathkumar's speech at Adangathe trailer release has lead to controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X