Don't Miss!
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், தமிழரைத் தவிற: சரத்குமார் கிண்டல்!
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என சரத்குமார் கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: தமிழர்களையும் வாழவைக்கும் தமிழகம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் அடங்காதே. இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகர் சரத்குமார், வழக்கம்போல கலகலப்பூட்டினார். ஜி.வி.பிரகாஷும் நானும் காதலித்து நடித்தோம், அதனால் இது ஒரே காதல் மயமான படம் எனக் கூறினார்.
17 வருடங்களாக திரையுலகில் கஷ்டப்பட்டு வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் ஷண்முகத்தை புகழ்ந்த அவர், இப்படம் வெள்ளி விழாப் படமாக அமையும். ஆனால் இயக்குனர் அவசரப்பட்டு வெள்ளி விழா நிகழ்வில் பேச வேண்டிய விஷயங்களை இப்போதே பேசிவிட்டார் என்றார்.
கதாநாயகி சுரபி பற்றி பேசும்போது, சுரபி எனப் பெயர் வைத்துள்ளார். அமுத சுரபி போல தமிழ் வரும் கவலைப்படாதீர்கள் எனக் கூறிய அவர். தமிழ்நாட்டுல வந்து இறங்குனீங்கன்னா வந்தாரை வாழவைக்கும் தமிழகம் எல்லாரையும் வாழவைக்கும். தமிழர்களைத் தவிற... எனக் கூறியதும் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. கன நேரத்தில் சுதாரித்த சரத், ஓ சாரி.. தப்பா சொல்லிட்டேனா? தமிழர்களையும் வாழவைக்கின்ற தமிழ்நாடு என்று சொல்லி முடித்தார்.
சரத்குமாரின் பேச்சு சிரிப்பலையை உண்டாக்கியது. ட்ரெயிலரை பார்க்கும் போது தற்போது தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இப்படத்தில் ஜிவி.பிரகாஷ், சுரபி, மந்திரா பேடி, தம்பி ராமையா, மற்றும் பலர் நடித்துள்ளனர். பிகே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே