Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வழக்கமான பரிசோதனை தான்… கேப்டன் நலமுடன் இருக்கிறார்… சரத்குமார் ட்வீட் !
சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்று நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆமா.. ஊசி எங்கே? உண்மையிலேயே தடுப்பூசி போட்டாரா நயன்? வெடித்த சர்ச்சை.. விளாசும் நெட்டிசன்ஸ்!
ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் நடிகர் சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார்.
போட்டியிடவில்லை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை.
அனுமதிக்கப்பட்டார்
இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வேகமாக பரவின.
வதந்தியை நம்பவேண்டாம்
தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தேவையின்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தது.
அன்பு நண்பர் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், தேமுதிக துணை செயலாளர் திரு.L.K.சுதீஷ் அவர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் (1)
— R Sarath Kumar (realsarathkumar) May 19, 2021
கேப்டன் நலமாக இருக்கிறார்
இந்நிலையில், நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்பு நண்பர் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், தேமுதிக துணை செயலாளர் திரு.L.K.சுதீஷ் அவர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் . கேப்டன் அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் நலமுடன் உள்ளார் என சுதீஷ் தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என சரத் குமார் கூறியுள்ள்ளார்