நண்பர்கள், ரசிகர்களிடம் பேசாதே - ஸ்ருதிக்கு அம்மா சரிகா கட்டுப்பாடு
சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்த ஸ்ருதி ஹாஸனுக்கு சில அன்புக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறாராம் அம்மா ஸ்ருதிஹாஸன்.
காரணம், சமீபத்தில் அவர் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் முயற்சி.
இனி இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெரிந்த திரைத்துறை நண்பர்கள், ரசிகர்களுடன்கூட போனிலோ நேரிலோ பேசத் தடை விதித்துள்ளாராம் சரிகா.

எதுவாக இருந்தாலும் ஸ்ருதியை அவரது மேனேஜர் மூலம் மட்டுமே அணுக வேண்டும் என்பது சரிகாவின் கண்டிப்பான புதிய உத்தரவு.
அதேபோல, இனி தனியாக வசிப்பதும் ஆபத்து என்பதால், சகல பாதுகாப்புடன்கூடிய புதிய வீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளாராம் சரிகா.
பாந்த்ரா வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு குடிபோக தயாராகிறார். தன் மகள் விஷயத்தில் முன்னாள் மனைவியின் கட்டுப்பாடுகளை அமைதியாக அனுமதித்துவிட்டாராம் கமல்.
Comments


Click it and Unblock the Notifications